விழுப்புரம் அருகே பூரிகுடிசை பகுதியில் பனங்காடு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற பனை திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு பனைபொருட்களான உணவு மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
விழுப்புரம் அருகேயுள்ள பூரிகுடிசை என்ற கிராமத்தில் பனங்காடு அறக்கட்டளை சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் பனைகனவு திருவிழா இன்று தொடங்கியது. நாளை வரை இது நடைபெற உள்ளது. இந்நிகழ்வின் தொடக்கமாக பூரிகுடிசை கிராமம் முழுவதுமாக 100 க்கும் மேற்பட்ட பனையேறிகள் ஊர்வலமாக பறை அடித்தும் சிலம்பம் ஆடிவந்து பனைமரத்திற்கு படையலிட்டு திருவிழாவினை தொடங்கினர்.
இதனை தொடர்ந்து பனை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் பனை கள்-ஐ உண்டு மகிழ்ந்தனர். பனை திருவிழாவில் பனை பொருட்களால் செய்யப்படும் அழகு சார்ந்த பொருட்கள், இயற்கை விதை பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டு விற்பனை செய்யபட்டன.
மேலும் பனையினால் ஏற்படும் நன்மைகள் குறித்து கருத்தரங்கமும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்காட்சியினை பார்வையிட்டு பனையால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி சென்றனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், பனையேறிகள் தமிழகத்தில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டுமெனவும் கல் ஒரு போதை பொருள் என்பதை அனைவரிடத்திலும் கொண்டு செல்லவேண்டும் என வலியுறுத்தினர்.
பனை மரத்தின் பொருட்களால் உணவு மற்றும் அழகுப்பொருட்கள் செய்து பொருளாதாரத்தினை உயர்த்த முதல் முறையாக பூரிகுடிசையில் நடைபெறும் பனை திருவிழா அனைவரிடத்திலும் முன்னுதாரணமாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த பனை கனவு திருவிழாவின் முக்கிய நோக்கம் என்னவென்றால், பனை ஏறும் தொழிலாளர்களின் முக்கியத்துவம் மற்ற பொதுமக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த பனை கனவு திருவிழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.