விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூரில் உரிய அனுமதி இன்றி இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன், தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயதான லட்சுமி அம்மாள், அவரது 48 வயதான மகன் முத்து விநாயகம் ஆகியோர் காணாமல் போனதாக உறவினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர்கள் இருவரும், அடுத்த ஒரு மாதத்தில் செங்கல்பட்டு ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அங்கு தான் தாயும், மகனும் உயிரிழந்ததாக சிபிசிஐடி போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால், உயிரிழந்ததற்கான காரணம் குறித்துக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே, அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து 53 பேர் பெங்களூருவில் உள்ள ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டதாகவும், அவர்களில் 15 பேர் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Villupuram