விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் மிகவும் பழமையும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் பங்குனி மாத தீமிதி திருவிழாவிற்கான கொடியேற்றதுடன் தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் பங்குனி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு 473 ஆம் ஆண்டு தீ மிதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
கொடியேற்ற விழாவை முன்னிட்டு ஊரல் குளக்கரையில் இருந்து கரகம் ஜோடித்துக் கொண்டு வந்து மேளதாளங்கள் முழங்க கோவிந்தா, கோவிந்தா என்று பக்தர்களின் பக்தி கோஷங்களிடையே கொடி மரத்தில் அன்னம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் கீழ்ப்பெரும்பாக்கம், பொய்யப்பாக்கம், எருமணதாங்கல், காகுப்பம், சாலையம்பாளையம், மகாராஜபுரம் உள்ளிட்ட 10 ஊர் மக்கள் கலந்துக்கொண்டு வழிபாடு நடத்தினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த நிலையில் மார்ச் 22ம் தேதி முதல் நாள் உற்சவம் தொடங்கி 10ம் நாளான மார்ச் 31ம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி விழா நடைப்பெற உள்ளது. இந்த விழாவில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram