மின்சார கட்டணத்தை குறைப்பதற்காக வீட்டு மாடியில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி செய்ய முன் வருகிறவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என அரசு பள்ளி ஆசிரியர் காங்கேயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டு மாதத்தில் 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோன்ற மின்சார கட்டண உயர்வை குறைப்பதற்காக பொதுமக்கள் சோலார் பேனல்களை பயன்படுத்தலாம் என்று பலரும் பரிந்துரைக்கின்றனர்.

விழுப்புரம் ஆசிரியர்
சூரிய சக்தி மூலம் இயங்கும் சோலார் மூலம் மின்சார கட்டண செலவைக் குறைத்து மாதம் குறைந்த பணத்தை சேமிக்கலாம். இதை பல பகுதி பொதுமக்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
சூரிய சக்தி மூலம் இயங்கும் சோலாரை வீடுகளில் பயன்படுத்தலாம், விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதுபோன்று பல முறைகளில் சூரிய சக்தி பயன்படுத்தலாம்.
அதுபோல விழுப்புரத்தில் 15 வருடங்களாக சூரிய சக்தி மூலம் இயங்கும் சோலார் பேனல்களை பயன்படுத்தி, மாதம் மின்சார கட்டணத்தை தவிர்த்து வருகிறார் அரசு பள்ளி ஆசிரியர் காங்கேயன்(55). இவர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
மின்சார கட்டணத்தை தவிர்ப்பதற்காக 2006-ம் ஆண்டில் சூரிய சக்தி மூலம் இயங்கும் சோலார் பலகைகள் பயன்படுத்தி மின்சார கட்டணத்தை குறைத்துள்ளார். இதனை அமைப்பதற்காக அப்போதே 50,000 ரூபாய் வரை செலவு செய்து உள்ளார்.
தற்போது அவர் செய்த செயலால், தற்போது உயர்ந்து வரும் மின்சார கட்டணத்தில் இருந்து தப்பித்து வருகிறார். இவர் மாதம் ஆயிரம் ரூபாய் வரை சேமித்து வைத்துள்ளார்.
மேலும் சோலார் பேனல்கள் பயன்படுத்துவது குறித்து கூறியதாவது, ‘நான் சூரிய சக்தி மூலம் இயங்கும் சோலார் பவரை பயன்படுத்தி வீட்டு உபயோக மின் விசிறி, மின்சார விளக்கு, கணினி என அனைத்தும் மின்சார சக்தி மூலமே என் வீட்டில் இயங்கி வருகிறது. காலையிலிருந்து மாலை வரை சூரிய சக்தி மூலம் கதிர்கள் உள்வாங்கி இரவு முழுவதும் நாங்கள் அதனை பயன்படுத்தி வருகிறோம். இந்த சோலார் பயன்படுத்துவதன் மூலம் நாம் மாதாமாதம் மின்சாரம் கட்டணம் செலுத்தும் தொகையிலிருந்து ஆயிரம் ரூபாய் மிச்சம் படுத்தி வருகிறேன். எங்கள் வீட்டில் உள்ள சோலார் பேனல்கள் 600 வாட்ஸ் ஆகும்.
எனவே தமிழகத்தில் வருங்காலத்தில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டில் சூரிய சக்தி மூலம் இயங்கும் சோலார் பேனல்களை வைத்து மின்சாரம் பெற்றுக் கொள்ளுமாறும், மின்சார கட்டணத்தை குறைப்பதற்காக வீட்டு மாடியில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி செய்ய முன் வருகிறவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.