முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரத்தில் புத்தக திருவிழா.. ஆர்வமுடன் கலந்துகொண்ட மாணவர்கள்.. 

விழுப்புரத்தில் புத்தக திருவிழா.. ஆர்வமுடன் கலந்துகொண்ட மாணவர்கள்.. 

X
விழுப்புரத்தில்

விழுப்புரத்தில் புத்தக திருவிழா

Villupuram Book Fair | விழுப்புரம் மாவட்டத்தில் முதன் முதலாக நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவை பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் முதன் முதலாக நடைபெற்று வருகிறது மாபெரும் புத்தக திருவிழா. நகராட்சி திடலில் விமர்சையாக நடைபெறும் இந்த புத்தக திருவிழாவை பார்ப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் சார்ந்த அரசு பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை புத்தகத் திருவிழா நடைபெறாத நிலையில், தற்போதுதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காகவும் மாவட்மம்தோறும் புத்தகத் திருவிழா நடத்த உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவை கண்டு களிக்க விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள், பிற மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை உற்சாகமாக வாங்கிச் செல்கின்றனர்.

இதையும் படிங்க : ம‌ழைக்குப்பின் ர‌ம்மிய‌மாக‌ காட்சிய‌ளித்த‌ கொடைக்கான‌ல்.. ரசித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

இந்த புத்தக திருவிழா பற்றி மாணவர்கள் கூறுகையில், “இதுபோன்ற மாபெரும் புத்தக திருவிழா விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறுவது மிக சந்தோஷமாக இருக்கிறது. இவ்வளவு பெரிய புத்தகத் திருவிழாவினை முதல் முறையாக காண்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. பாடப்புத்தகத்தில் மட்டும் சில புத்தகங்களின் பெயர்களை பார்த்தோம், ஆனால் நிஜமாக படிப்பதற்கு இவ்வளவு புத்தகங்கள் இருபக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும்போது மிக ஆச்சரியமாக இருக்கிறது” என கூறினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், இந்த புத்தக திருவிழாவில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    First published:

    Tags: Local News, Villupuram