விழுப்புரத்தில் உள்ள முத்தோப்பு, முத்தாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கடந்த பத்து நாட்களுக்கு முன் கொடியேற்றம் செய்யப்பட்டு தினந்தோறும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
பங்குனி உத்திர விழாவினை முன்னிட்டு அலகு குத்தியும்,காவடி எடுத்தும், மிளாகய் அபிஷேகம் செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
முத்தோப்பு முருகன் கோவிலில் முக்கிய நிகழ்வான குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணமாகாதவர்கள் மார்பின் மீது உரல் வைத்து மஞ்சள் இடித்து நேர்த்தி கடனை செலுத்தினால் நிச்சயம் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கை இப்பகுதியில் நிலவுவதால், இந்த நேத்திக்கடனை பக்தர்கள் பயபக்தியுடன் செய்து முடித்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram