விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டத்தின்கீழ் உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண் திட்டம்” முதலாமாண்டு பயிலும் மாணவியர்கள் மற்றும் விடுபட்ட மாணவியர்களுக்கும் வழங்குவது குறித்து கல்லூரி முதல்வர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவிகளின் கல்வி இடைநிற்றலை தவிர்த்திடும் விதமாக உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் 2-ஆம் ஆண்டு 3-ஆம் ஆண்டு மற்றும் 4-ஆம் ஆண்டு உயர்கல்வி பயிலும் 1.33 இலட்சம் மாணவியர்கள் இத்திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற்று பயனுடைந்து வருகின்றனர்.
இதையும் படிங்க : முதல் பரிசு ரூ.10 லட்சம்... விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதம் முதல் 56 கல்லூரியைச் சார்ந்த 23 மற்றும் 4-ஆம் ஆண்டுகளில் படிக்கும் 4174 மாணவிகளுக்கு ரூ.20,870000- வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்தில்,01.10.2022 அன்றிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில்86 கல்லூரியைச் சார்ந்த முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் முதற்கட்டத்தில் விண்ணப்பிக்க தவறிய 3233 மாணவிகள் தற்பொழுது விண்ணப்பித்துள்ளனர்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் கல்லூரி மாணவிகளின் ஆதார் எண் வங்கி கணக்கில் அவர்களின் தொலைபேசி எண்ணுடன் இணைந்து உள்ளதையும், இந்தியன் வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பாரத வங்கி கனரா வங்கி ஆகிய வங்கிகளில் மட்டுமே மாணவிகள் வங்கி கணக்கு வைத்திருப்பதை அனைத்து கல்லூரி முதல்வர்களும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும்(https://www.pudhumaipen.tn.gov.in) என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்ய தவறிய மாணவிகள் அனைவரும் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக பதிவு செய்யலாம். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
எனவே அரசுப்பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியர்கள் எவரும் விடுபடாத வகையில் அவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் சரியான வழிகாட்டுதல்களை வழங்கி இத்திட்டத்தின்கீழ் மாணவியர்கள் பயன்பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்லூரி முதல்வர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : பூஜா - விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Vizhupuram