முகப்பு /விழுப்புரம் /

2022-2023ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருது.. விழுப்புரம் ஆட்சியர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..

2022-2023ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருது.. விழுப்புரம் ஆட்சியர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..

மாதிரி படம்

மாதிரி படம்

Villuppuram News : 2022-2023ம் ஆண்டு சிறந்த திருநங்கைக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Viluppuram, India

திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2022-2023ம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறும் சாதனையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “இந்த விருது பெற விரும்புபவர்கள் அரசு உதவி பெறாமல் தங்களது வாழ்க்கையை கட்டமைத்து கொண்ட திருநங்கையாக இருத்தல் வேண்டும். மேலும் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து இருக்கவேண்டும். குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப்பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி செய்திருக்க வேண்டும். மேலும் விருதுக்கு விண்ணப்பிப்பவர் தமிழ்நாடு திருநங்கை நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

இந்த விருது பெற விரும்பும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய திருநங்கைகள், https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 01.02.2023 முதல் 28.02.2023 வரை விண்ணப்பித்து விரிவான கருத்துருக்களை விழுப்புரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 28.02.2023 மாலை 5 மணிக்குள் கொடுக்கவேண்டும். விருது பெற தகுதியுள்ளவர்கள் இதற்கென தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவர்” என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Villupuram