1975-ம் ஆண்டு முதல், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து அணி. கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடான இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்த இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தை அதிக பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.