முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ ரவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் மூன்றாவது முறையாக நேற்று நிறைவேற்றப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஓ . பன்னீர்செல்வத்துக்கு, சபாநாயகர் அப்பாவு இந்த மசோதா தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பளித்தார்.
அப்போது, அதிமுக என குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கும், ஈபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் அருண்குமார், கோவிந்தராஜ், அரக்கோணம் ரவி ஆகியோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அரக்கோணம் ரவி எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் அரக்கோணம் ரவி புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, OPS, Vellore