முகப்பு /செய்தி /திருச்சி / பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணக்கு டீச்சர்.. போக்சோவில் கைது

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணக்கு டீச்சர்.. போக்சோவில் கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியை

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியை

Trichy Pocso arrested | திருச்சி மாவட்டம் துறையூரில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் டியூசன் பயில வந்த 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் துறையூரில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் டியூசன் பயில வந்த 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை போக்சோ வழக்கில் கைது.

துறையூர் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி (43). துறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்போது சித்திரப்பட்டி பகுதியில் தங்கி இருந்து டியூஷன் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

அதே பள்ளியில் படிக்கும் துறையூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆசிரியை தேவியிடம் டியூசன் சென்று வருவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று 16 வயது சிறுவனுக்கு ஆசிரியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் தேவி மீது மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியை தேவியை போக்சோ வழக்கில் கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.

Also see... ஆருத்ரா மோசடி வழக்கு... நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்கு முடக்கம்...!

டியூசன் வந்த சிறுவனிடம் பாலியல் தொந்தரவு செய்த பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: சே.கோவிந்தராஜ், திருச்சி

First published:

Tags: Crime News, POCSO case, School Teacher, Trichy