முகப்பு /செய்தி /திருச்சி / நகைக்காக மூதாட்டியை கட்டிப்போட்டு கொடூரமாக கொன்ற கும்பல்! - திருச்சியில் நடந்த பயங்கரம்!

நகைக்காக மூதாட்டியை கட்டிப்போட்டு கொடூரமாக கொன்ற கும்பல்! - திருச்சியில் நடந்த பயங்கரம்!

கொலை செய்யப்பட்ட  மூதாட்டி

கொலை செய்யப்பட்ட மூதாட்டி

ராஜேஸ்வரி கை கால்கள் வாய் ஆகியவை துண்டால் கட்டப்பட்ட நிலையில் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி அருகே மூதாட்டியை  கட்டிப்போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டியம், ஐயப்பன் நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தவர். உடல்நிலை குறைவு காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டதாக தெரிகிறது. கருப்பண்ணன் மனைவி ராஜேஸ்வரி (65) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் மணிகண்டன் நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டியில் மெடிக்கல் கடை நடத்தி வருவதுடன் குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருகிறார். மகள் பிரியா திருமணம் முடிந்த நிலையில் திண்டுக்கல்லில் கணவருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் மூதாட்டி ராஜேஸ்வரி தொட்டியம் ஐயப்பன் நகரில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அப்பகுதியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜேஸ்வரியை பார்த்துள்ளனர். இன்று அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவ  இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை திறந்து பார்த்தனர். அப்போது  ராஜேஸ்வரி கை கால்கள் வாய் ஆகியவை துண்டால் கட்டப்பட்ட நிலையில் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார்.

இதையும் படிங்க: முதியவர்கள் நாய் வளர்க்க இந்த இனங்களை தேர்வு செய்யலாம்.. வாங்கி செல்ல உதவியாக இருக்கும்..!

வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. மேலும் பீரோ திறக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தது. இதையடுத்து முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையா ஆகியோர் ராஜேஸ்வரியின் சடலத்தை முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு தடையவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்துள்ளனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. வலையபட்டியில் இருந்து மகன் மணிகண்டன் வந்த பின்னர் தான் வீட்டிலிருந்த பணம் பொருட்கள் திருட்டு போனதின் மதிப்பு தெரிய வரும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

top videos

    செய்தியாளர் - சே.கோவிந்தராஜ்

    First published:

    Tags: Crime News, Trichy