திருச்சி மாவட்டத்தில் நாளை (ஜூலை 27) மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் உயர் அழுத்த மின் பாதையில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இந்த மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மின் பாதை மூலம் மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான தர்மநாதபுரம், மைக்கேல்பட்டி, மேல பெருங்காவூர், ஒத்தைவீடு, சிறுமருதூர், செம்பழுனி, மேளவாளாடி, புதுக்குடி, எசனைகோரை மற்றும் அப்பாதுரை ஆகிய பகுதிகளுக்குமின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், எடமலைப்பட்டி புதூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட சொக்கலிங்கபுரம், ஆர்.எம்.எஸ்.காலனி, கே.ஆர்.எஸ்.நகர், எடமலைப்பட்டிபுதூர், ராஜீவ்காந்திநகர், கங்கை நகர், கிருஷ்ணாபுரம் மற்றும் பஞ்சப்பூர் ஆகிய பராமரிப்பு பணிகள் நாளை நடப்பதால் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
மேற்கண்ட எடமலைப்பட்டி புதூர் பகுதிகளில், நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என திருச்சி மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மின் தடை செய்யப்படவுள்ள நிலையில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.