திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புனரமைக்கப்பட்ட அரங்கத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் டி.ராஜா திறந்து வைத்தார்.
திருச்சியில் கடந்த 1905ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட திருச்சி நீதிமன்ற கட்டிடம். அந்த கட்டிடம் தற்போது ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் புனரமைப்பட்டது. அதனை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ராஜா திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பி.சௌந்தரராஜன், செயலாளர் மதியழகன், துணைத்தலைவர் ராஜேஷ்கண்ணா, பொருளாளர் சுரேஷ்பாபு, இணைச் செயலாளர் ஆரோக்கியதாஸ்,திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy