முகப்பு /திருச்சி /

மாநில கல்வி கொள்கை - திருச்சியில் நாளை (செவ்வாய்கிழமை) கருத்து கேட்பு கூட்டம்

மாநில கல்வி கொள்கை - திருச்சியில் நாளை (செவ்வாய்கிழமை) கருத்து கேட்பு கூட்டம்

தமிழக அரசின், மாநில கல்வி கொள்கையை உருவாக்க திருச்சியில் நாளை கருத்து கேட்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. இது பற்றிய விவரங்களை  மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசின், மாநில கல்வி கொள்கையை உருவாக்க திருச்சியில் நாளை கருத்து கேட்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. இது பற்றிய விவரங்களை  மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசின், மாநில கல்வி கொள்கையை உருவாக்க திருச்சியில் நாளை கருத்து கேட்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. இது பற்றிய விவரங்களை  மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

மாநில கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் கருத்து கேட்பு கூட்டம் திருச்சியில் நாளை நடைபெறுகிறது.

தமிழக அரசின் சார்பில், மாநில கல்வி கொள்கையை உருவாக்க, டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில், உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. மாநில கல்வி கொள்கை குறித்து, அனைத்து தரப்பிடமும் கருத்து கேட்க, இந்தக் குழு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பொது தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன.

இந்த கருத்துக்கேட்பு கூட்டங்கள் மாவட்டங்கள் தோறும் நடத்தப்படுகிறது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் நாளை (11,10.2022) மாநில கல்விக்கொள்கை தொடர்பான கருத்துக் கேட்புக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திருச்சியில் குறைந்த செலவில் மகிழ்ச்சி நிறைந்த மலை சுற்றுலா - இங்கு இத்தனை அருவிகள் இருக்கா..!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சி மாவட்டத்தில் நாளை 11ஆம் தேதி (செவ்வாய் கிழமை) மாநில கல்விக் கொள்கை தொடர்பான கருத்து கேட்புக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

திருச்சி மாவட்டத்தில் ஒன்றிய அளவில் கருத்து கேட்புக்கூட்டம் நடைபெறும் இடங்கள்:  அந்தநல்லூர் - ஸ்ரீரங்கம் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, லால்குடி - நெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர் - அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி, மணிகண்டம் - சோமரசம்பேட்டை ஹோலி கிராஸ் மெட்ரிக் பள்ளி, மணப்பாறை- ஜீவன் கல்வியியல் கல்லூரி, மருங்காபுரி - கோவில்பட்டி விடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

முசிறி - எம்.ஐ.டி. பாலிடெக்னிக் கல்லூரி, புள்ளம்பாடி - குழந்தை யேசு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச்சி - தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, திருவெறும்பூர் - பாய்லர் பிளான்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தொட்டியம் - கொங்கு நாடு (பி.எட்) கல்லூரி, தா.பேட்டை - சௌடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உப்பிலியபுரம் - எரகுடி ஆர்.எஸ்.கே.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வையம்பட்டி - ஆர்.சி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Education, Trichy