பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருமலுக்கு உகந்த நாளாகிய புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெருமாளை தரிசனம் செய்வது, அனைத்து திவ்யதேச பெருமாளையும் தரிசனம் செய்ததற்கு சமம் என்பது ஐதீகம். இதனால், இந்த நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வர்.
அன்படி, தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கம் வந்து வணங்கிச் செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் நம்பெருமாள் (ரங்கநாதர்) சேவை நேர விவரங்கள் கோயில் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, புரட்டாசி சனிக்கிழமையான வருகிற 24ஆம் தேதி, அடுத்த மாதம் (அக்டோபர்) 1 ஆம் தேதி, 8ஆம் தேதி ஆகிய நாட்களில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரையும் சேவை நேரம் ஆகும்.
இந்த நாட்களில் விஸ்வரூபம், பொதுஜன சேவை இல்லை. அதேபோல் பகல் 12 மணி முதல் பகல் 2 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் மாலை 6.45 மணி வரையும் பூஜா காலம் என்பதால் சேவை கிடையாது. மேலும் அடுத்த மாதம் 15ஆம் தேதி காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 2 மணி முதல் மாலை 4 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் சேவை நேரம் ஆகும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பகல் 12 மணி முதல் பகல் 2 மணி வரையும் பூஜா காலம் என்பதால் சேவை இல்லை. மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணி வரை பூஜை காலம் மற்றும் புறப்பாடு நடைபெறும். மேற்கண்ட 4 சனிக்கிழமைகளிலும் விஸ்வரூபம் பொதுஜன சேவை இல்லை என்று கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tiruchirappalli S22p24