240 நாட்கள் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் வேண்டும், எந்த தொழிலில் பணிபுரிந்தாலும் ரூபாய் 21,000 குறையாத மாத ஊதியம் வழங்க வேண்டும், நல வாரியங்களில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் குறையாத ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி தாமதம் இல்லாமல் நிதி பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஏ.ஐ.டி.யு.சி தேசிய செயலாளர் வகிதா நிஜாம் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அதன் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy