திருச்சி மாவட்டத்தில் சுமார் 2400 மாட்டு வண்டி தொழிலாளர்கள் மாட்டு வண்டியை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது செயல்பட்டு கொண்டிருந்த மாதவப் பெருமாள் கோவில், மான்படிமங்கலம் தாளக்குடி, ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த மணல் மாட்டு வண்டி குவாரிகள் பொங்கலுக்கு முன் மூடப்பட்டது. பொங்கல் முடிந்ததும் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் பொங்கல் முடிந்து ஒரு வார காலம் ஆகியும் இன்னும் மணல் குவாரிகள் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரமே இந்த மாட்டு வண்டி தான். தற்போது 5 நாட்களுக்கு மேலாக குவாரிகள் திறக்கப்படாததால் தங்களது மாடுகளுக்கு தீவனம் கூட வாங்கிப்போட முடியவில்லை என கூறி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy