திருச்சி மாவட்டத்தில் நாளை (08-07-2022) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை பாரமரிப்பு பணிகள் நடப்பதால், அங்கு மின் தடை ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதன்படி, கீழ்கண்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என, ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Must Read : ராமேஸ்வரம் சென்றால் இந்த இடத்திற்குப் போக தவறாதீங்க - பிரமிப்பூட்டும் அரண்மனை!
மின் தடை பகுதிகள்:
ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர்.பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூர், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், பி.கே.அகரம், ரெட்டிமாங்குடி, ஜி.கே.பார்க், கூத்தனூர், ஸ்ரீதேவிமங்கலம், கொளக்குடி, குமுளூர், தச்சன்குறிச்சி, கண்ணாக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy