முகப்பு /திருச்சி /

திருச்சி மாவட்ட மக்களே உஷார்... நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

திருச்சி மாவட்ட மக்களே உஷார்... நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது

மின் தடை

மின் தடை

Trichy District | திருச்சி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (15-02-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என திருச்சி மினவாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்:

ஸ்ரீரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, வசந்த நகர், ரயில்நிலைய சாலை, உத்திரவீதி, மேற்கு உத்திரவீதி, வடக்கு உத்திரவீதி, தெற்கு உத்திரவீதி, வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு சித்திரை வீதிகள்,

Must Read : வடிவேலு நடித்த ‘கைப்புள்ள வீடு’ எங்கிருக்கிறது தெரியுமா? - அடடே.. முன்னணி நடிகர்களின் இத்தனை படங்கள் இங்குதான் எடுக்கப்பட்டதா!

அடையவளஞ்சான் தெருக்கள், பெரியார் நகர், அம்மா மண்டபம் சாலை, மாம்பழச் சாலை மற்றும் வீரேசுவரம் ஆகிய இடங்களில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy