முகப்பு /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை தெரியுமா?

திருச்சி மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை தெரியுமா?

மின் தடை

மின் தடை

Trichy District | திருச்சி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் அதவத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (14-02-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மன்னார்புரம் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்:

அதவத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் போசம்பட்டி, அதவத்தூர் சந்தை, இனியானூர், மேலப்பட்டி, கொய்யாதோப்பு, முத்து பிளாட், சரவணபுரம், கீழ்வயலூர், போதாவூர், சுண்ணாம்புகாரன்பட்டி, சாந்தாபுரம், முள்ளிக்கரும்பூர், புலியூர், பள்ளக்காடு, வாசன்சிட்டி, அல்லித்துறை, பெரியகருப்பூர், எட்டரை, மன்ஜான்கோப்பு, வியாழன்மேடு ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

Must Read : புஷ்பா படத்தின் ஃபேமஸ்ஸான இந்த சீன் நம்ம தென்காசியில் தான் எடுக்கப்பட்டது - எங்கு தெரியுமா?

இதேபோல, கீரீக்கல்மேடு, நாச்சிக்குறிச்சி, கோப்பு, செவகாடு, சோமரசம்பேட்டை, தாயனூர், ஒத்தக்கடை, அதவத்தூர், மல்லியம்பத்து, செங்கற்சூலை, சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வாசன்நகர், வாசன்வேலி, வயலூர், குழுமணி மற்றும் சிவந்தநகர், பேரூர் ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy