முகப்பு /திருச்சி /

திருச்சி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்கள்...

திருச்சி மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுங்கள்...

மின் தடை.

மின் தடை.

Trichy District | திருச்சி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோட்டத்துக்கு உட்பட்ட சமயபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (09-02-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஸ்ரீரங்கம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை பகுதிகள்:

ஸ்ரீரங்கம் கோட்டத்துக்கு உட்பட்ட சமயபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி.நகர் பூங்கா, எழில்நகர், காருண்யாசிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, கரியமாணிக்கம் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

Must Read : டிரக்கிங் செல்லவும், சுற்றுலாவுக்கும் ஏற்ற குரங்கணி - நினைத்தாலே இனிக்கும் ஸ்பாட்!

இதேபோல, தெற்கு எதுமலை, பாலையூர், வலையூர், கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்புதூர், கூத்தூர், நொச்சியம், பளுர், பாச்சூர், திருவாசி, அழகிய மணவாளம், குமரகுடி, திருவரங்கப்பட்டி, கோவர்த்தக்குடி, பனமங்கலம், எடையப்பட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நாளை மின்சார வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy