முகப்பு /திருச்சி /

திருச்சி மாவட்ட மக்களே உஷார்... நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

திருச்சி மாவட்ட மக்களே உஷார்... நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Trichy District | திருச்சி மாவட்டம் லால்குடி வாளாடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் வாளாடி துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (02-02-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி லால்குடி இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.

Must Read : பசுமை... இயற்கையின் பேரழகு... மனம் விரும்பும் மாஞ்சோலைக்கு ஒரு டிரிப் போகலாம்!

மின் தடை பகுதிகள்:

மாந்துறை, வாளாடி, நகர், திருமங்கலம், எசனைக்கோரை, புதுக்குடி, மேலவாளாடி, முத்துராஜபுரம், தர்மநாதபுரம், மேலப்பெருங்காவூர், கீழப்பெருங்காவூர், சிறுமருதூர், அப்பாதுறை, டி.வளவனூர், தண்டாங்கோரை, வேலாயுதபுரம், கீழ்மாரிமங்கலம், நெய்குப்பை, புதூர் உத்தமனூர், வேளாண் கல்லூரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy