திருச்சி மாவட்டம் பூவாளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (11-01-2023) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
அதன்படி, நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின், லால்குடி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Must Read : நீங்காத நினைவைக் கொடுக்கும் தென்காசி மாவட்ட அணைகளுக்கு ஒரு டிரிப் அடிங்க..
மின்தடை பகுதிகள்:
மணக்கால், ஜெ.ஜெ.நகர், சாந்தி நகர், பூவாளூர், பெருவளநல்லூர், வெள்ளனூர், நன்னிமங்கலம், அன்பில், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், ஆதிகுடி, சாந்தமங்கலம், ஆனந்திமேடு, காட்டூர், கொத்தமங்கலம் மற்றும் சிறுமயக்குடி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy