முகப்பு /திருச்சி /

சொத்துக்களை மீட்டு தரக்கோரி திருச்சி ஆட்சியரிடம் மனு கொடுத்த மூதாட்டி..

சொத்துக்களை மீட்டு தரக்கோரி திருச்சி ஆட்சியரிடம் மனு கொடுத்த மூதாட்டி..

X
மனு

மனு கொடுத்த மூதாட்டி

Trichy Collector Office : திருச்சி தாயனூர் கிராமத்தை சேர்ந்த வெள்ளையம்மாள் சொத்துக்களை மீட்டு தர கோரி கண்ணீர் மல்க மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி தாயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (77). இவர் சேமரசம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இதில் ஒருவரை மட்டும் உள்ளூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளோம். சந்திரா என்பவள் தான் உள்ளூரில் இருந்து வசித்து வருகிறாள்.

மனு கொடுத்த மூதாட்டி

எனது மகள் சந்திரா கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறாள் என்பதால், அவளுக்கு 2 செண்டு இடம் எழுதிக் கொடுத்துள்ளோம். வயதான காலத்தில் என்னை பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் நான் எழுதிக் கொடுத்துள்ளேன்.

எனக்கு இப்போது வயதாகி விட்டது என்பதால் மீதமுள்ள சொத்துக்களை என்னுடைய 3 மகள்களுக்கும் சொத்துக்களை பாகம் பிரித்து கொடுக்கலாம் என்று நினைத்த பொழுது என்னுடைய மொத்த சொத்துக்களையும் எங்களிடம் ஏமாற்றி எழுதி வாங்கியது தெரியவந்தது” என தெரிவித்திருந்தார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Trichy