திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில்நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிசான்றுகள், இதரச் சான்றுகள், குடும்பஅட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படைவசதிகள், திருமண உதவித் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்திபொதுமக்களிடமிருந்து 546 மனுக்கள் பெறப்பட்டது.
இம்மனுக்கள் மீது உரியநடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்டஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்சார்பில் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம்அமைப்பதற்காக 3 பயனாளிகளுக்கு தலா 50,000-க்கு கான ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tamil News, Trichy