திருச்சி மாவட்டம் துறையூருக்கு அருகே ஆலத்துடையான்பட்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் வைகாசி பெரு விழா நடைபெற்றது.
இத்திருவிழாவில் ஆலத்துடையான்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மாரியம்மனின் அருள் பெற்றுக்கொண்டனர். மாரியம்மனுக்கு தீப ஆராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் மாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து குதிரை வாகனத்தில் ஊர்வலமாக வந்தார் கருப்புசாமி. அதில் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு கருப்புசாமியிடம் அருள் பெற்றுக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, மாலை நேரத்தில் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிப்பட்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Religion18, Trichy