திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த அலுவலக வளாக கட்டிடம் திறக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூபாய் 7.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அலுவலக வளாக கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் குத்துவிளக்கேற்றி அலுவலக கட்டிடத்தினை பார்வையிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், உதவி இயக்குனர் கங்காதாரணி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சங்கரஜோதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy