திருச்சி கல்லுக்குழியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராமநவமி, அனுமன் ஜெயந்தி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயருக்கு 10வது ஆண்டாக 1 லட்சத்து 8 வடை மாலை சாற்றுதல் விழா மற்றும் 10 ஆயிரத்து 8 ஜாங்கிரி மாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதன் பின்னர் வடை மாலை மற்றும் ஜாங்கிரி மாலைகள் சாற்றுதல் விழா காலை 7 மணிக்கு நடைபெற்றது.
இரவு 9 மணிக்கு மேல் ஆஞ்சநேய சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த வடை மாலை மற்றும் ஜாங்கிரி மாலை சாற்றுதல் விழாவில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் தங்களது பெயர், நட்சத்திரங்களை முன்பதிவு செய்து கொண்டனர்.
இதையும் படிங்க : கொரோனா வைரஸ்... திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முக்கிய அலர்ட்
இங்கு வடை மாலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ரூ.75 முதல் ரூ.30 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஜாங்கிரி மாலைக்கு ரூ.375-லிருந்து ரூ.15,000 வரை அதன் எண்ணிக்கை அடிப்படையில் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த நிகழ்வை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். குறிப்பாக உள்ளூர், வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து சென்றனர். மேலும் விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுதாகர், தக்கார் சுந்தரி, கோவில் அர்ச்சகர் வரதராஜன் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.
செய்தியாளர் : மணிகண்டன் - திருச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy