முகப்பு /திருச்சி /

மக்காச்சோளம், பருத்தியை தரையில் கொட்டி போராட்டம் நடத்திய திருச்சி விவசாயிகள்!

மக்காச்சோளம், பருத்தியை தரையில் கொட்டி போராட்டம் நடத்திய திருச்சி விவசாயிகள்!

X
போராட்டம்

போராட்டம் நடத்திய திருச்சி விவசாயிகள்

Trichy News : திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மக்காச்சோளம், பருத்தியையும் தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மக்காச்சோளம், பருத்தியையும் கீழே கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்துகொண்டு தங்களது குறைகளை கூறினர். தொடர்ந்து, தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பருத்தி மற்றும் மக்காச்சோளத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் இந்த ஆர்ப்பாட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Local News, Trichy