முகப்பு /திருச்சி /

திருச்சியில் இருந்து சொந்த ஊர் செல்ல தீபாவளி சிறப்பு பேருந்துகள்... எங்கிருந்து புறப்படும்? - முழுவிவரம்

திருச்சியில் இருந்து சொந்த ஊர் செல்ல தீபாவளி சிறப்பு பேருந்துகள்... எங்கிருந்து புறப்படும்? - முழுவிவரம்

சிறப்பு பேருந்துகள்

சிறப்பு பேருந்துகள்

Diwali Special Buses | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவதற்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்), திருச்சி மண்டலத்தின் மூலம் பயணிகள் எளிதாக செல்ல முக்கிய வழித்தடங்களில் இன்று (வியாழக் கிழமை) முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை (Diwali Special Buses) ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கு ஏதுவாக திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்து நிலையங்கள் இன்று முதல் செயல்படுகின்றன. இதில் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சோனா, மீனா தியேட்டர் அருகிலும், மதுரை மற்றும் புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மன்னார்புரம் ரவுண்டானா அருகிலும் இருந்து புறப்படும்.

இந்த இடங்களில் இருந்து (இரவு நேரம் உள்பட) அனைத்து நேரங்களிலும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மண்டல இயக்கப் பகுதிகளான லால்குடி, திருவெறும்பூர், மணப்பாறை, துவரங்குறிச்சி, துறையூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு 150 சிறப்பு பேருந்துகளும், தஞ்சைக்கு 50 பேருந்துகளும், மதுரைக்கு 50 சிறப்பு பேருந்துகளும், கோவைக்கு 20, திருப்பூருக்கு 20, திண்டுக்கல் மற்றும் பழனிக்கு 25, அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் இருந்து சென்னைக்கு 50, துறையூர் மற்றும் பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு 20 என பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Must Read : விருமன், சூரரை போற்று என பல படங்கள் எடுக்கப்பட்ட மதுரையின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்

இதேபோல் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிக்கு 50 சிறப்பு பேருந்துகளும், பெரம்பலூருக்கு 25 சிறப்பு பேருந்துகளும், துறையூருக்கு 25 பேருந்துகள் என மொத்தம் 485 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

அத்துடன், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் tnstc.in என்ற இணையதளத்திலிருந்து ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 23ஆம் தேதி வரை சென்னை கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், பெரம்பலூர், துறையூர் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Special buses, Trichy