திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியில் சுமார் 400க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் கலந்துகொண்டனர். மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர் நேரு உறுதிமொழி வாசித்து பின்னர் வண்ண பலூன்களை பறக்கவிட்டு பேரணியை துவக்கி வைத்தார்.
இந்த பேரணி மருத்துவமனை வளாகத்தில் இருந்து புறப்பட்டு மருத்துவமனை நுழைவாயில் வழியாக சென்று அரசு மருத்துவமனையின் பழைய நுழைவாயில் வழியாக மருத்துவமனை வந்தடைந்தது. பேரணியில் புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியில் அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Trichy