தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்படும். இதற்கான செலவுகளை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களே ஏற்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 18 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துக்கொண்டு மணமக்களுக்கு திருமாங்கல்யத்தை வழங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையினர் திருமணம் முடிந்த ஜோடிகளுக்கு கட்டில், மெத்தை, கிரைண்டர், மிக்ஸி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்ட 1 லட்சம் மதிப்புள்ள சீர் வரிசை பொருட்களை வழங்கினர். விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் மணமக்கள் உறவினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Temple