முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / போலீஸ் அவசர எண்ணுக்கு போன் செய்த ஆடு? ஓனர் சொன்ன கதை.. குழம்பிப்போன போலீஸ்!

போலீஸ் அவசர எண்ணுக்கு போன் செய்த ஆடு? ஓனர் சொன்ன கதை.. குழம்பிப்போன போலீஸ்!

ஆடு

ஆடு

போலீசாருக்கு ஒரு ஆடு போன் செய்ததாக வெளியான தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

குழந்தைகளுக்கு அவசரகால எண்ணைகளை தெரியப்படுத்தினால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அதை டயல் செய்யலாம். ஆனால் ஒரு ஆடு டயல் செய்யுமா? 

டெய்லி ஸ்டார் செய்தியின்படி, இந்த சம்பவம் ஓக்லஹோமாவில் நடந்துள்ளது. அங்கே, அவசர அழைப்பின் பேரில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தை அடைந்தபோது, ​​​​அவர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அங்கு எந்த மனிதருக்கும் உதவி தேவைப்படவில்லை, ஆனால் ஒரு வளர்ப்பு ஆடு தான் ஃபோன் செய்திருக்கிறது என ஓனர் சொல்லியுள்ளார்.

எனிட் போலீஸ் ஸ்டேஷனின் போலீஸ் அதிகாரிகள் டேவிட் ஸ்னீட் மற்றும் நீல் ஸ்டோரி ஆகியோர் தங்களுக்கு அவசர அழைப்பு வந்தபோது தாங்கள் பணியில் இருந்ததாகவும் மறுமுனையில் யாரோ கத்திக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர். உடனே அந்த அழைப்பாளருக்கு உதவி செய்ய அந்த இடத்தை அடைந்ததுள்ளனர். அங்கு யாரோ காயமடைந்திருப்பதாகவும் உதவி தேவைப்படுவதாகவும் அவர்கள் உணர்ந்தனர். இதற்கிடையில், அதிகாரி ஒருவர் அங்கு இருந்த ஆட்டை பார்த்ததும், தனது சக ஊழியரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தை போலீசார் மட்டும் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், ஆட்டின் உரிமையாளர் அவர்களை வரவேற்று, ஆடு அதன் கூட்டாளிகளிடமிருந்து பிரிக்கப்பட்டுவிட்டதாகவும், அதனால் தற்போது வருத்தமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆடு அவசரகால எண்ணுக்கு அழைத்து, உதவியை நாடியதாகவும் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு போலீசார் ஷாக் ஆகியுள்ளனர். ஆட்டின் ஓனர்தான் ஏதோ பொய் சொல்வதாக விசாரணையும் நடந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published: