திருவாரூர் மாவட்டம் வடுவூர், கோவில்வெண்ணி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதாக மின் வாரியம் சார்பில், அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், செவ்வாய் கிழமை ( நாளை) இந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கே மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதனால், பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஆகையால், நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவிசெயற்பொறியாளர் க.பாலநேத்திரம் தெரிவித்துள்ளார்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்:
வடுவூர், சாத்தனூர், நெய்வாசல், புள்ளவராயன்குடிகாடு, நகர், காளாச்சேரி, கோவில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலபூவனூர், நத்தம், ஆதனூர், சோனாப்பேட்டை, கொட்டையூர், அம்மாப்பேட்டை,
Must Read : நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்த ஊர் இதுதானா..! - எந்த மாவட்டத்தில் இருக்கிறது தெரியுமா?
கருப்பமுதலியார்கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூர், சேர்மாநல்லூர், முனியூர், அவளிவநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Power cut, Power Shutdown, Thiruvarur