முகப்பு /செய்தி /திருவாரூர் / கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி - 2 சிறுவர்களை தேடும் பணி தீவிரம்!

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி - 2 சிறுவர்களை தேடும் பணி தீவிரம்!

சிறுவர்களின் உடல்களை தேடி வரும் தீயணைப்புத்துறையினர்

சிறுவர்களின் உடல்களை தேடி வரும் தீயணைப்புத்துறையினர்

Kollidam river | தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் சிறுவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Mannargudi, India

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கினர். இதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், 2 பேரை தேடி வருகின்றனர்.

மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத், ஹரி பிரசாத், கோபாலகிருஷ்ணன், ஆந்திராவை சேர்ந்த அபிராம் ஆகியோர் ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் உள்ள வேத பாட சாலையில் படித்து வருகின்றனர். இவர்கள் இன்று அதிகாலை 4 மணி அளவில் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது வழக்கத்தை விட அதிக தண்ணீர் வந்த நிலையில் விஷ்ணுபிரசாத் ஆற்றில் சிக்கியுள்ளார்.

இதையும் படிங்க: Exclusive : "அமித் ஷா சொல்லியும் அமமுகவை கூட்டணியில் சேர்க்க மறுத்துவிட்டர் ஈபிஎஸ்.." - டிடிவி தினகரன்

 அவரை காப்பாற்ற முயன்ற அபிராமன், ஹரி பிரசாத் ஆகியோரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதை பார்த்த கோபாலகிருஷ்ணன் அருகே இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் சிறுவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் விஷ்ணு பிரசாத் சடலமாக மீட்கப்பட்டார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அபிராம், ஹரி பிரசாத் ஆகியோரை தேடும் பணி தொடர்கிறது.

செய்தியாளர்கோவிந்தராஜ் ( திருச்சி)

top videos
    First published:

    Tags: Local News, Thiruvarur