முகப்பு /செய்தி /திருவள்ளூர் / குழந்தையை கூட தூக்காத கணவர்... வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல்... விரக்தியில் விபரீத முடிவெடுத்த மனைவி..!

குழந்தையை கூட தூக்காத கணவர்... வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல்... விரக்தியில் விபரீத முடிவெடுத்த மனைவி..!

பவானி - பிரசாத்

பவானி - பிரசாத்

மனைவி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur), India

திருவள்ளூர் ஒண்டி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத் (28). இவர் படப்பை பகுதியில் உள்ள மொபைல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், இவரது உறவுகார பெண்ணான பவானி என்பவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் முடிந்து தற்போது ஒன்றரை வயது குழந்தை உள்ளது.

இந்நிலையில் படப்பை பகுதியில் பணியாற்றி வரும் பிரசாந்துக்கு அதே தொழிற்சாலையில் பணிபுரியும் கவிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனால் பவானி மற்றும் பிரசாத் இருவருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து, கடந்த ஒரு வருடமாக மனைவிடம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கவிதா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் அடிக்கடி வீட்டிற்கு வராமல் வெளியிலேயே இருந்துள்ளார் பிரசாத்.

இது குறித்து மனைவிக்கு தெரிய வரவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையில் கள்ளக்காதலி கவிதா பிரசாத்தின் மனைவிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனக்கும் பிரசாத்திற்கும் திருமணம் முடிந்து விட்டது என்றும், தான் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அவரை ஏன் வீட்டுக்குள் வைத்து பூட்டி வைத்துள்ளீர்கள்? அவரை விருப்பம் போல் வாழ வழி விடுங்கள் என பேசியுள்ளார். இதன் ஆடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு வருட காலமாக குழந்தையை கூட பிரசாத் தூக்காமல் இருந்துள்ளார். இதனால் அடிக்கடி வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கணவனுடன் தொலைபேசியில் பேசிய பின்பு பவானி, அவரது படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிட்டுள்ளார். இதையறிந்த உறவினர்கள் உடனடியாக பவானியை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்தபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம்...!

தகவல் அறிந்த பவானியின் பெற்றோர் சம்பவம் குறித்து மணவாள நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் பிரசாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகி ஒன்றரை வயது குழந்தை இருக்கும் நிலையில் கணவண் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை அறிந்த மனைவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் : பார்த்தசாரதி (திருவள்ளூர்)

First published:

Tags: Crime News, Thiruvallur