ஆந்திராவில் அருவியில் குளிக்கச் சென்ற சென்னையைச் சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஆந்திர எல்லையில் உள்ள நாகலாபுரத்தில் , பூபதியேஸ்வர கோனே அருவி உள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள இந்த அருவியில் குளிக்க, தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் செல்வது வழக்கம். அதன்படி சென்னையில் இருந்து இளைஞர்கள் 5 பேர், கோனே அருவிக்குச் சென்றுள்ளனர். அவர்கள், அங்குள்ள பாறையில் ஏறி தண்ணீரில் குதித்துள்ளனர்.
மேலும் படிக்க...குழந்தையை கூட தூக்காத கணவர்... வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல்... விரக்தியில் விபரீத முடிவெடுத்த மனைவி..!
அப்போது நீண்ட நேரமாகியும் 3 பேர் வெளியே வராததால் சக நண்பர்கள் பதற்றம் அடைந்தனர். பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தண்ணீரில் மூழ்கிய மாதவன், நவீன், கார்த்திக் பிரசாத் ஆகியோரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thiruvallur