திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலைய பகுதிகளில் பாராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வீரபாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நாளை (செப்டம்பர் 22) மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி, வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதூர், குப்பாண்டாம்பாளையம், எம்.ஏ., நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லை நகர் மற்றும் டி.கே.டி., மில்.
இதேபோல, ஆண்டிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட, இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு, ஜீவா நகர், சின்னியகவுண்டன்புதுார், கே.என்.எஸ்.நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே.காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர் மற்றும் லிட்டில் பிளவர் நகர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது.
Also Read : மதுரைவாசிகளின் ஃபேவரைட் இளநீர் சர்பத்.. இதில் என்ன ஸ்பெஷல்?
மேலும், அருள்புரம் துணை மின்நிலைய பகுதிகளான அருள்புரம், தண்ணீர் பந்தல், கணபதிபாளையம், கவுண்டம்பாளையம், மாதேஸ்வரா நகர், குங்குமபாளையம், கவுண்டம்பாளையம் புதுார், உப்பிலிபாளையம், அண்ணா நகர், லட்சுமி நகர், சென்னிமலைப்பாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் பவர் கட் செய்யப்படுகிறது.
இதேபோல, செந்தூரன் காலனி, குன்னாங்கல்பாளையம், மலையம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ, திருமலை நகர், அய்யாவு நகர், நொச்சிபாளையம் வாய்க்கால் மேடு, சிந்து கார்டன், சரஸ்வதி நகர், சின்னக்கரை, சேடபாளையம் மற்றும் ஓம்சக்தி நகர் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.