குடும்ப சூழ்நிலை, வறுமை, பொருளாதாரம், உடல்நிலை போன்ற பல காரணங்களால் பள்ளி மாணவர்கள் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்கு செல்கின்றனர். அப்படி செல்லும் மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தொழிற்கல்வி ஆகும். எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் நேரடியாக இந்த தொழிற்கல்வியில் சேர்ந்து பயன்பெறலாம்.
குடும்ப பொருளாதாரம் காரணமாக வேலைக்கு செல்லும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயில்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தொழில் கல்வி பயிலும் மாணவர்கள் 18 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை தர வயது உச்சவரம்பு இல்லை.
திருப்பூர் மாவட்டத்தில் 3 அரசினர் தொழில் பயிற்சி நிலையங்கள் உள்ளன.
1. திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள தொழிற்பயிற்சி நிலையம்.
2. தாராபுரம் அரசு தொழிற்பயர்ச்சி நிலையம்.
3. உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையம்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 20ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ஐடிஐ
குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டதாரிகள் வரையில் விண்ணப்பிக்கலாம். இதற்கு 14 வயது முதல் 40 வயது வரை உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். அதேவேளையில் பெண்களுக்கு வயது உச்சவரம்பு என்று எதுவும் கிடையாது. அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவியர்களுக்கு கட்டணம் இன்றி பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் விலையில்லா மடிக்கணினி, சீருடை மற்றும் காலணி, பாடப்புத்தகங்கள் மாதம் தோறும் 750 ரூபாய் உதவித்தொகை, பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும். பயிற்சி முடிந்த நபர்களுக்கு தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்பிரிவுகள் குறித்த விவரங்கள் அறியவும் மாணவர் சேர்க்கைக்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய். கிரெடிட், டெபிட் கார்டு, ஆன்லைன் பேமென்ட், கூகுள் பே மூலமாகவும் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம்.
இதுதவிர தாராபுரம், உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள உதவி சேவை மையத்தையும் தொடர்பு கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மாவட்ட உதவி இயக்குனரை 0421-2230500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களை அறிய
https://skilltraining.tn.gov.in/DET/ இந்த லிங்கை பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(திருப்பூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.