திருப்பூர் மாவட்டம் காங்கயம் மின்கோட்டத்துக்குட்பட்ட ஆலம்பாடி, முத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.
ஆலம்பாடி, முத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.
ஆகையால், காலை 9 முதல் மாலை 5 மணி வரை ஆலம்பாடி, முத்தூர் துணை மின் நிலையங்களில் உள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்சார வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார்.
மின் தடை ஏற்படும் இடங்கள்:
ஆலம்பாடி துணை மின் நிலையத்திற்குப்பட்ட நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
அதேபோல, முத்தூர் துணை மின் நிலையத்திற்குப்பட்ட முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடைசெய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(திருப்பூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.