திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆகஸ்ட் 26-ம் தேதி நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதில், திருப்பூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் விவசாயம் குறித்தும் அதன் தொடர்புடைய துறைகள் குறித்தும் குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாதாந்திர குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் நடக்கிறது.
இந்த கூட்டமானது திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் பண்டரிநாதன் தலைமையில் நடக்கிறது. திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி வட்டங்களை சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிக்கலாம்.
மேலும், இதுகுறித்து விவசாயிகள் மனுவாகவும் சமர்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tiruppur