முகப்பு /திருநெல்வேலி /

திருநெல்வேலி மாவட்ட மக்களே உஷார்.. நாளை(மார்ச் 18) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு..  

திருநெல்வேலி மாவட்ட மக்களே உஷார்.. நாளை(மார்ச் 18) இந்த பகுதிகளில் மின்தடை அறிவிப்பு..  

மாதிரி படம்

மாதிரி படம்

power shutdown : திருநெல்வேலி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி, பாளை ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை (மார்ச் 18) (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக கொங்கந்தான் பாறை, இட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள் :

இதுகுறித்து நெல்லை மின் பகிர்மான கழகத்தின் நகர்ப்புற விநியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரெட்டியார்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான் குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இதையும் படிங்க : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு..! - ஏன் தெரியுமா?

இதேபோல் பாளை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், வி.எம்.சத்திரம், கேடிசி நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம் , மேலகுளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகர், சமாதானபுரம், பாளை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம், பரப்பக்குறிச்சி, மனப்படை வீடு, கீழநத்தம், பாளை பஸ் நிலையம், மகாராஜா நகர், தியாகராஜ நகர், அன்பு நகர், முருகன் குறிச்சி, பொட்டல் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Tirunelveli