பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில் உள்ள குளங்களில் இருந்து விவசாய மற்றும் மண்பாண்டம் தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் வண்டல் மண் களிமண் எடுப்பதற்காக விண்ணப்பிக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள குளங்களில் இருந்து விவசாய மற்றும் மண்பாண்டம் தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் வண்டல்மண் களிமண் எடுப்பதற்கு தகுதி வாய்ந்த 593 குளங்கள் கண்டறியப்பட்டு அறிவிக்கை செய்யப்பட்டிருந்தது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிலையில் மேலும் 251 குளங்கள் கண்டறியப்பட்டு அறிவிக்க செய்யப்பட்டுள்ளது.விவசாய பயன்பாட்டிற்காக நன்செய் நிலங்களை மேம்படுத்தும் வகையில்,இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ஏக்கர் நிலத்திற்கு 75 கன மீட்டர் அளவும், புன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்காக ஒரு ஏக்கர் நிலத்திற்கு 90 கன மீட்டர் அளவு மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக 60 கன மீட்டர் அளவு, சொந்த பயன்பாட்டிற்கு 30 கன மீட்டர் அளவு கட்டணம் இல்லாமல் எடுத்து பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இச்சலுகையை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் தரத்தினை மேம்படுத்தும் வகைக்கு தங்களது விவசாய நிலம் பட்டா, 10(1) சிட்டா அடங்கல், கிரைய பத்திரம், புலப்பட நகல் ஆகியவற்றுடனும் மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சான்றுகளுடனும் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்களிடம் உரிய படிவத்தினை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli