திருநெல்வேலி புத்தகத் திருவிழாவை ஒட்டி வாசகம் எழுதும் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் பிப்ரவரி 23-ம் தேதிக்குள் படைப்புகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘பொருநை நெல்லை ஆறாவது புத்தகத் திருவிழா பிப்ரவரி 25 முதல் மார்ச் 7ஆம் தேதி வரை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற உள்ளது.
பன்முகத்தன்மையை போற்றும் வகையில் அனைவருக்குமான விழாவாக இத்திருவிழா நடைபெற உள்ளது. இப்புத்தகத் திருவிழாவுக்கான கருத்துகளை உள்ளடக்கி வாசகங்கள் எழுதும் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டிக்கு வாசகங்கள் மேற்படி கருத்தை உள்ளடக்கியதாகவும் சுமார் நான்கு அல்லது ஐந்து வார்த்தைகளுக்கு மிகாமலும் பிறமொழி கலப்பில்லாமலும் படைப்பாளிகளின் சொந்த கருத்தாகவும் இருக்க வேண்டும்.
போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் யாவரும் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான வாசகங்களை படைப்பாளியின் முகவரி, தொடர்பு எண் ஆகிய விவரங்களுடன் பிப்ரவரி 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் porunainellaifest@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று வாசகங்களுக்கு புத்தகத் திருவிழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli