நெல்லை திரிபுராந்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக துவங்கியது. இதில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டில் உள்ள அருள்மிகு திரிபுரந்தீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கியது.
இதையொட்டி சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து திருவிழா நாட்களில் காலை மாலைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஏப்ரல் 25ஆம் தேதி கற்பக மரம் தாமரைப்பூ வாகனத்திலும் 26 ஆம் தேதி பூத, சிம்ம வாகனத்திலும் சுவாமி அம்பாள் வீதி உலா வந்தனர் 27 ஆம் தேதி ரிஷப வாகனத்திலும் 28ஆம் தேதி இந்திர வாகனத்திலும் 29ஆம் தேதி யானை, அன்ன வாகனங்களிலும் சுவாமி அம்பாள் வீதி உலா வந்தனர்.
குறிப்பாக 63 நாயன்மார்கள் வீதி உலாவும் நடைபெற்றது. மே ஒன்றாம் தேதி காலை 8 மணிக்கு வெள்ள சாத்தி கூத்தப் பெருமாள் வீதி உலாவும் காலை 10 மணிக்கு பச்சை சாத்தி வீதி உலாவும் நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு கங்காள நாதர் தேர் வீதிகள் உலாவும் கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி, வெள்ளியங்கிரி வாகனத்தில் அம்பாள் வீதி உலாவும் நடைபெற்றன.
விழாவின் சிகர நிர்வாக மே 2-ம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின் வடம் பிடித்து பக்தர்கள் தேரை இழுத்தனர். நான்கு மாட வீதி வழியாக தேதி பக்தர்கள் இழுத்துச் சென்று மீண்டும் கோயில் முன்பே நிறுத்தப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதில் இளைஞர்கள் ஆண்கள் பெண்கள் உள்ளிட்டோர் சிவாய நமக என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மூன்றாம் தேதி தீர்த்தவாரியும் நான்காம் தேதி தெப்ப உற்சவம் நடைபெற உள்ளன.
இந்த ஏற்பாடுகளை கோயில் செயலாளர் சுஜாதா மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli