முகப்பு /திருநெல்வேலி /

நெல்லை மக்களே உஷார்... நாளை இங்கெல்லாம் மின் தடை

நெல்லை மக்களே உஷார்... நாளை இங்கெல்லாம் மின் தடை

மின் தடை

மின் தடை

Tirunelveli District | திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tirunelveli, India

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் காரணமாக, நாளை (11.13.2023) திருநெல்வேலி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை (11ஆம் தேதி) சனிக்கிழமைமாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொக்கிரகுளம், மாருதி நகர், திருநெல்வேலி சந்திப்பு, மீனாட்சிபுரம் வடக்கு தெற்கு புறவழிச் சாலைகள், பரணி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும் என நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துக்குட்டி அறிவித்துள்ளார்.

Must Read : நெல்லையில் உள்ள நடுகல்லை தொடாமல் விலகி இருந்த மக்கள்.. கதை என்ன தெரியுமா?

இதே போல் சமாதானபுரம் துணை மின் நிலைய பகுதிக்கு உட்பட்ட ராஜாக்கமங்கலம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக உயர் மின்னழுத்த கம்பங்கள் மற்றும் மின் பாதைகள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது . இதன் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சீவலப்பேரி சாலை, சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என நகர்ப்புற செயற்பொறியாளர் முத்துகுட்டி தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Tirunelveli