திருநெல்வேலி மாவட்டத்தில், கொலை வழக்குகளில் இறந்துபோன 17 நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் 53 பேருக்கு குறுகிய காலத்தில் நிவாரணத் தொகை சுமார் ரூ.51 லட்சம் கிடைக்க ஏற்பாடு செய்த அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் நிலைய எழுத்தர்களுக்கு திருநெல்வேலி எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.
கொலை வழக்குகளில் இறந்துபோன நபர்களின் குடும்பத்திற்கு அரசால் நிவாரணநிதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் மரணமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், தனி கவனம் செலுத்தி வருகிறார்.
அதன்படி, நிவாரணத்தொகை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரி தரணிக்கு உத்தரவிட்டதன் பேரில், நிர்வாக அதிகாரி வழிகாட்டுதல்படி அமைச்சுப் பணியாளர் 'C' பிரிவு கண்காணிப்பாளர் முத்துவேல்ராஜ், உதவியாளர் மகேஸ்வரி, ஆகியோர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க : சோழர்கள் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பாண்டிய மன்னன் யார் தெரியுமா?
அவர்கள், விரைந்து மாவட்ட ஆட்சியர் பரிந்துரை பெற்று, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் ஆணை பெற்று மிக குறுகிய காலத்தில் 17 கொலை வழக்குகளில் மரணமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 53 பேருக்கு சுமார் ரூ.51 லட்சம் நிவாரணம் பெற்று கொடுத்துள்ளனர்.
மேலும் படிக்க : ஒரு லிட்டர் டீசலில் ரயில் எத்தனை கிலோ மீட்டர் ஓடும்னு தெரியுமா...? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!
எனவே, விரைவாக நிவாரணம் பெற்று கொடுக்க காரணமாக இருந்த அமைச்சுப் பணியாளர் 'C' பிரிவு கண்காணிப்பாளர் முத்துவேல்ராஜ், உதவியாளர் மகேஸ்வரி, ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி ஊக்குவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் 17 குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்ட ஆவணங்களை விரைந்து பெற்றுக்கொடுத்து,பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு நிவாரணதொகை கிடைக்க உதவியாக இருந்த காவல்நிலைய எழுத்தர்களை பாராட்டி அவர்களுக்கு வெகுமதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Police, Tirunelveli