முகப்பு /திருநெல்வேலி /

Homeopathy Day: ஹோமியோபதி மருத்துவத்தில் இத்தனை சிறப்புகள் இருக்கா?

Homeopathy Day: ஹோமியோபதி மருத்துவத்தில் இத்தனை சிறப்புகள் இருக்கா?

X
ஹோமியோபதி

ஹோமியோபதி

World Homeopathy Day 2023: | உலக ஹோமியோபதி மருத்துவ தினம் இன்று (ஏப்ரல் 10) கொண்டாடப்படும் நிலையில் ஹோமியோபதி மருத்துவத்தில் உள்ள சிறப்புகள் குறித்து நெல்லையை சேர்ந்த மருத்துவர் விவரிக்கிறார்.

  • Last Updated :
  • Tirunelveli, India

World Homeopathy Day 2023: ஜெர்மனியில் ஏப்ரல் 10, 1755ம் ஆண்டு பிறந்தவர் சாமுவேல் ஹானிமன். மருத்துவம் மூலம் மக்களுக்கு உதவ விரும்பிய அவர், நோய்கள் குறித்தும் அவற்றை நிரந்தரமாக குணமாக்கும் வழிமுறைகள் பற்றியும் தீவிரமாக ஆராய்ச்சி செய்தார். அதன் விளைவாக ஹோமியோபதி என்ற மருத்துவ முறையை கண்டுபிடித்தார்.

ஹோமியோபதியின் வளர்ச்சி :

ஹோமியோபதி மருத்துவம் பல கட்ட வளர்ச்சியை அடைந்து, இன்று உலகம் முழுவதும் வியந்து பார்க்க வைத்துள்ளது. ஆங்கில மருத்துவ முறைக்கு ஈடாக ஹோமியோபதி மருத்துவம் முறையும் நோயை குணமாக்கி வருகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஹோமியோபதி தினம் :

இந்நிலையில், சாமுவேல் ஹானிமன் பிறந்த தினம் உலக ஹோமியோபதி மருத்துவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் துரைராஜ் நம்மிடம் இந்த மருத்துவமுறை குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இதையும் படிங்க : சொத்து தகராறு : இரும்பு கம்பியால் தாக்கி மருமகளை கொலை செய்த மாமானார்... நெல்லையில் பகீர் சம்பவம்..!

எந்த பக்க விளைவும் கிடையாது :

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஹோமியோபதி முறையில் எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சைனஸ், தைராய்டு, மூட்டு சம்பந்தப்பட்ட வியாதிகள் மற்றும் சரும நோய்களுக்கு மிகச்சிறந்த வைத்திய முறை ஹோமியோபதி. இது மட்டுமின்றி டான்சில், மூக்கில் சதை வளர்ச்சி, தைராய்டு சுரப்பி குறைபாடு, கண் புரை, மூலம், பவுத்திரம், கொழுப்பு, மார்பக கட்டிகள், பித்தப்பை கற்கள், ஆரம்ப நிலை கருப்பை கட்டிகள், நீர் கட்டிகள் மற்றும் குதிகால் வலி போன்ற வியாதிகளுக்கும் அறுவை சிகிச்சை இன்றி ஹோமியோபதி மருத்துவம் குணப்படுத்துகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அறுவை சிகிச்சை இல்லை :

top videos

    சிறுநீர்க்கல், பித்தப்பை கல் போன்ற நோய்களுக்கு அறுவை சிகிச்சை தான் தீர்வு என்ற நிலை உள்ளது, ஆனால், ஆரம்ப நிலையில் அறுவை சிகிச்சை இல்லாமல் ஹோமியோபதி சிகிச்சையில் சரி செய்து விடலாம். மேலும், தொடக்க நிலை சர்க்கரை நோயாளிகள் ஹோமியோபதி மருந்து எடுத்துக் கொள்ளலாம். பக்க விளைவுகள் வராது. அதேபோல் ரத்த அழுத்த நோயும் சரியாகிவிடும். இதேபோல் பல்வேறு நோய்களை ஹோமியோபதி மருத்துவ முறை மூலம் கட்டுக்குள் கொண்டு வரலாம்” என அவர் தெரிவித்தார்.

    First published:

    Tags: Health, Homeopathy, Lifestyle, Local News, Tirunelveli