தமிழ்நாடு கேரளா வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் உயிரிழந்தன. இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் பரவுகிறதா என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் பன்றி காய்ச்சல் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து நெல்லை அரசு மருத்துவர் வினோத்குமார் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் தமிழ்நாட்டில் பன்றி காய்ச்சல் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. அதனால் யாரும் கவலைப்பட தேவையில்லை.
பன்றி காய்ச்சல் ஏற்பட்டால் தொண்டை வலி காய்ச்சல் வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகள் ஏற்படும். பறவைக்காய்ச்சல் நுரையீரல் தவிர கண் கிட்னி லிவர் போன்ற உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படலாம் சத்தான உணவுகள் உட்கொண்டாலே தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.
செய்தியாளர் : சந்தனகுமார் - திருநெல்வேலி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli